வருடல்

செய்திகள்

சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்தது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.

ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்மானத் துள்ளமையை அடுத்து தனக்கான ஆதரவைத் திரட்டிக்கொள்வதில் கொழும்பு தீவிரமாக உள்ளது.

இலங்கையிலிருந்து டில்லிக்கு விரைந்த உயர்மட்டக் குழு, ஜெனிவாவில் தமக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க உதவுமாறும், இது விடயம் தொடர்பில் ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேசி, சாதகமான பதிலொன்றைத் தருமாறும் கோரியுள்ளது.

இதற்கு புதுடில்லி தரப்பிலிருந்து உறுதியான சாதகமான பதிலொன்று கொழும்புக் குழுவினருக்கு கிடைக்கப்பெறவில்லை.

இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்று தாம் தீவிரமாகப் பரீசிலித்து வருகின்றனர் என்றும் இலங்கை விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் சமரசம் பேசமுடியாது என்றும் புதுடில்லி ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது.

இராஜதந்திர வழிமுறைகள் தோல்வியை நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், தாம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லியும் நிராகரித்துள்ளமையால் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தாம் ஆதரிக்கப்போவதாக வாஷிங்டன் பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளை ஆழமாக மதிநுட்பத்துடன் பரிசீலித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா மாநாடு ஆரம்பமானாலும் இலங்கை விவகாரம் தொடர்பில் மார்ச் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்திலேயே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் எனவும் அறியக்கூடியதாகவுள்ளது.

தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
Murugathasan Foundation
VMF300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • இன்று மேனனை சந்திக்கும் கூட்டமைப்பின் குழு நாளை மன்மோகனை சந்திக்கிறது.
  • செப்ரெம்பரில் மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் ஒரே நாளில்!
  • இராணூவத்தினரால் பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவசங்கர் இன்று விடுதலை!
  • இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று போரூரில்!
  • இந்திய அரசின் அழைப்பை ஏற்று டில்லி பயணமானது கூட்டமைப்பின் குழு !
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்:
vairamuthu_Thiyakaraja_11042013vnad140
மரண அறிவித்தல்:
kuperan_ma_vnad140
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • இன்று மேனனை சந்திக்கும் கூட்டமைப்பின் குழு நாளை மன்மோகனை சந்திக்கிறது.
  • செப்ரெம்பரில் மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் ஒரே நாளில்!
  • இராணூவத்தினரால் பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவசங்கர் இன்று விடுதலை!
  • இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று போரூரில்!
  • இந்திய அரசின் அழைப்பை ஏற்று டில்லி பயணமானது கூட்டமைப்பின் குழு !
  • சிங்கள மக்கள் மத்தியில் சிந்தனைப் புரட்சி தேவை – மன்னார் ஆயர்
  • இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்:
  • உலகின் மிகவும் வயதான மனிதராக சிறிலங்காவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி!
  • போரின் பின்னர் அதிகரித்துச் செல்லும் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகம்: