வருடல்

செய்திகள்

ஐ.நா அமைதிகாப்புப் படையின் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக சவீந்திர சில்வா!

தமிழின அழிப்பில் ஈடுபட்டவரும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை முன்னின்று நடத்தியவருமான  ஐநாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் சார்பிலேயே இவர் இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குழுவில் அங்கம் வகிக்கும் உயர்மட்டத் தூதுவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பணியாற்றவுள்ளார்.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய பொறுப்பு ஒன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்த ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நாவின் முன்னாள் பிரதிச்செயலரும் கனடாவின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லூயிஸ் பிரெசிரே, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான கீழ்நிலைச் செயலருமான ஜீன் மேரி குகேனோ ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு முதல்முறையாக இந்த மாதம் கூடி தமது பணிகளை கவனிக்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா போர்க்குற்றங்களை இழைத்ததாக அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா செல்வதற்கான பயண ஒழுங்கு விபரம்:
geneva270212vn300
காணொளிகள்
Get the Flash Player to see this player.
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
தலைவரின் சிந்தனை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
  • இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு
  • லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக தற்காலிக நியமனம்.
  • தமிழ் யுவதியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த கருனா குழு!
  • ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
  • பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
விளம்பரங்கள்
இன்றைய படம்
இன்றைய படம்
முன்னையவை
Who's Online
6 visitors online now
6 guests, 0 members
சமூக வலை அமைப்புகள்
மரண அறிவித்தல்கள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • உலகப் பிரசித்தி பெற்ற களமுனை ஊடகவியலாளரான “Marie Colvin” கொல்லப்பட்டார்!
  • இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு
  • ஜெனீவா நோக்கி தமிழர்களே அணிதிரளுங்கள்! ஓங்கி ஒலிக்கும் தமிழகக் குரல்கள்!!
  • லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக தற்காலிக நியமனம்.
  • தமிழ் யுவதியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த கருனா குழு!
  • ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
  • இழந்த உரிமையை மீட்க தமிழர்கள் அயராது உழைக்க வேண்டும்: கனடா சர்வதேச மாநாடு வலியுறுத்து
  • பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
  • கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை!