செய்திகள்
இலங்கையை மூன்று நாட்கள் தாக்கப் போகும் கடும் காற்று:

இன்று 11ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டில் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமென இலங்கை வானிலை அவதான நிலையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி சில பிரதேசங்களில் 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமெனவும், கடற் பகுதிகளிலும் கடும் காற்று வீசுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு மீனவர்களை கேட்டுக்கொள்வதாகவும் இலங்கை வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.