செய்திகள்
மூத்த விவசாயிகள் கெளரவிப்பு!

உழவர் விழாவும், மூத்த விவசாயிகள் கௌரவிப்பும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.
-இதன் போது தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம் பெற்றதோடு, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த மூத்த விவசாயிகள் 15 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,அடம்பன் பொலிஸ் நிலைய அதிகாரி , மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், விவசாயிகள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.