<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வருடல்</title>
	<atom:link href="http://varudal.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://varudal.com</link>
	<description>தமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து  உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்</description>
	<lastBuildDate>Fri, 18 May 2012 00:17:45 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 00:17:45 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2971</guid>
		<description><![CDATA[இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின்மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என எம்மால் நினைவு கொள்ளப்படுகின்றது. மிக நீண்ட போராட்டத்தில் நாம் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்திருக்கிறோம். அன்னியப் படைகளின் கொடுமைகளில் நாம் எமது நிலங்களையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இழந்திருக்கிறோம். உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பல்லாயிரக்கணக்கான எமது மக்கள், உணவின்றி, உறைவிடமின்றி, மருத்துவ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/ltte-logo-200-vn.jpg"><img class="alignleft size-full wp-image-2980" title="ltte-logo-200-vn" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/ltte-logo-200-vn.jpg" alt="" width="200" height="150" /></a>இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின்மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என எம்மால் நினைவு கொள்ளப்படுகின்றது.</p>
<p>மிக நீண்ட போராட்டத்தில் நாம் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்திருக்கிறோம். அன்னியப் படைகளின் கொடுமைகளில் நாம் எமது நிலங்களையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இழந்திருக்கிறோம். உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பல்லாயிரக்கணக்கான எமது மக்கள், உணவின்றி, உறைவிடமின்றி, மருத்துவ உதவிகளின்றி அவலப்பட்டு மரித்தார்கள். இவ்வளவு அவலங்கள், தியாகங்களின் பின்னால் நாம் சோர்ந்து போகக்கூடாது. எமக்கான நீதியையும் விடுதலையையும் பெறும்வரை நாம் ஓய்ந்துபோகக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய நேரமிது.</p>
<p>மானுடவரலாற்றில் மிகக்கொடுமையான இனவழிப்பை எதிர்கொண்டுள்ள எமது இனம் தனக்கான நிரந்தரமான அரசியல்தீர்வாக முன்வைக்க வேண்டியது சிறிலங்கா என்ற அரசகட்டமைப்புக்குள் அல்லாமல் சுயாதீனமாகத் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடன்கூடிய அரசியல்தீர்வையேதான்.</p>
<p>எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள்மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும். இறுதி யுத்தமென்று கூறிக்கொண்டு எமது மக்கள்மேல் பகைவர் தொடுத்த கொடிய போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகொள்ளும் இவ்வேளையில், அவர்களின் குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.</p>
<p>பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டத்தைத் தொடர்ந்தும் வலுவாக முன்னெடுத்து எமது இறுதி இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்து போராடுவோமென இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.</p>
<p>இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையின் முழுவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.</p>
<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN01.jpg"><img class="alignleft size-full wp-image-2972" title="LTTE2012MAY18VN01" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN01.jpg" alt="" width="500" height="709" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN02.jpg"><img class="alignleft size-full wp-image-2973" title="LTTE2012MAY18VN02" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN02.jpg" alt="" width="500" height="710" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN03.jpg"><img class="alignleft size-full wp-image-2974" title="LTTE2012MAY18VN03" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN03.jpg" alt="" width="500" height="708" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN04.jpg"><img class="alignleft size-full wp-image-2975" title="LTTE2012MAY18VN04" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN04.jpg" alt="" width="500" height="709" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN05.jpg"><img class="alignleft size-full wp-image-2976" title="LTTE2012MAY18VN05" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN05.jpg" alt="" width="500" height="707" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN06.jpg"><img class="alignleft size-full wp-image-2977" title="LTTE2012MAY18VN06" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN06.jpg" alt="" width="500" height="709" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN07.jpg"><img class="alignleft size-full wp-image-2978" title="LTTE2012MAY18VN07" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN07.jpg" alt="" width="500" height="705" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN08.jpg"><img class="alignleft size-full wp-image-2979" title="LTTE2012MAY18VN08" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/LTTE2012MAY18VN08.jpg" alt="" width="500" height="711" /></a></p>
<p>த/செ/ஊ/அ/02/12 தமிழீழ விடுதலைப்  புலிகள்,</p>
<p>தலைமைச் செயலகம்,<br />
தமிழீழம்.<br />
18/05/2012.</p>
<p>தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2012</p>
<p>அன்பான தமிழ் மக்களே,</p>
<p>இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின்மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என எம்மால் நினைவு கொள்ளப்படுகின்றது.</p>
<p>ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசுதரப்பு படிப்படியாக மீறிக்கொண்டிருந்த நிலையிலும், தமிழ்மக்கள் வேண்டிநின்ற அரசியல் தீர்வைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சிறிலங்கா அரசுதரப்பு செய்யாமல் காலத்தை வீணடித்துக்கொண்டிருந்த நிலையிலும், பன்னாட்டுச் சமூகம் காட்டிய மெளனத்தை சிங்கள ஆட்சியாளர்கள் சாதகமாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் மேல் கொடிய போரைத் தொடுத்தார்கள்.</p>
<p>தென்தமிழீழத்தில் வெளிப்படையாகத் தொடங்கிய போர் தமிழரின் பூர்வீக நிலங்களெங்கும் விரிந்தது. சிறிலங்காப் படையினரின் வல்வளைப்புக்கள் விரிவடைந்து தமிழரின் நிலங்களை கையகப்படுத்தியது. எமது மக்கள் தமக்கான பாதுகாப்பைத் தேடி ஆயிரமாயிரமாக இடம்பெயர்ந்தார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்திற் கொள்ளாது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள்,  பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.</p>
<p>பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசின் கொடிய போரைத் தடுக்க பன்னாட்டுச் சமூகம் சரிவரச் செயற்படவில்லை. மாறாக சிலநாடுகள் தமிழ்மக்களுக்கெதிரான கொடிய இனவழிப்புப் போருக்குப் பக்கபலமாக நின்றன. எமது மக்கள் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று நீதிகேட்டு நடாத்திய போராட்டங்களைக் கண்டுகொள்ளாது இனவழிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் அப்போது நீதியின் வழியில் நடக்கவில்லை.</p>
<p>தொண்டு  நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைத் தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. இறுதியில் நவீன மானுடவரலாறு கண்டிராத மாபெரும் அழிவொன்றை முள்ளிவாய்க்காலில் ஏற்படுத்தி ஓய்ந்தது.</p>
<p>தாயகத்தில் சிங்கள இனவாத அரசின் கொடூரமான போர் முடிந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா மீது சிறிதளவேனும் அழுத்தமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா அரசு மூர்க்கத்தனமாக தமிழ்மக்கள் மீது தனது போரைத் திணித்திருந்தது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தமிழ்மக்களின் உயிரிழப்புக்களைத் தடுக்கத் தவறியுள்ளது எனவும் பன்னாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்கமாகவே தமது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.</p>
<p>இந்நிலையில் நடந்துமுடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது மனித உரிமை கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா அரசுமீது அழுத்தத்தைக் கொடுக்க முற்படும் இச்செயற்பாடு கொடிய இனவழிப்பை எதிர்கொண்டு நிற்கும் எமது தமிழினத்துக்கு ஓரளவு ஆறுதலைத் தந்துள்ளது. எனினும் தமிழ்மக்கள் வேண்டி நிற்கும் விடுதலையும் உரிமைகளும் இத்தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு தமிழர்களுக்குப் பாதகமான பல அம்சங்களையும் கொண்டுள்ளது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.</p>
<p>இனவழிப்பை நிகழ்த்தியவர்களே நடாத்திய கண்துடைப்பு விசாரணை அறிக்கையை முதன்மைப்படுத்தி அதன்வழியே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வழிமுறையை முன்மொழியும் இத்தீர்மானம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்காது. குறிப்பிட்ட விசாரணை அறிக்கையை தளத்திலும் புலத்திலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே நிராகரித்திருந்தனர் என்பதையும் பன்னாட்டுச் சமூகம் நினைவிற்கொள்ள வேண்டும்.</p>
<p>சிறிலங்கா அரசின் கட்டமைப்புக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையொன்றை தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வாகப் பரிந்துரைக்கும் இத்தீர்மானம் நடந்துமுடிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும்இ கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் -  இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளையும் கவனத்திற்கொள்ளவில்லையென்றே சொல்ல வேண்டும். மேலும் பன்னாட்டுச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்கவில்லையென்றே கூறவேண்டும்.</p>
<p>1983 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நிகழ்ந்த இனவழிப்பு நடவடிக்கைகளின் பின்னால் அடுத்த ஆண்டு கூடிய ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை விவகார அமர்வில் சிறிலங்கா தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தீர்மானமொன்றை நிறைவேற்றினர். அது தமிழரின் நிரந்தர பாதுகாப்புப்பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ போதிய கரிசனை கொள்ளாமல் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறையை மையமாக வைத்தே இருந்தது. அதன்பின்னர் இன்றுவரையான காலப்பகுதியில் இலட்சத்துக்குமதிகமான மக்களைப் படுகொலை செய்யவும், தமிழரின் பூர்வீக நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கவும், இலட்சக்கணக்கான தமிழ்மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றவுமே சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை சிங்களப் பேரினவாதத்துக்கு உதவியுள்ளது.</p>
<p>இதைவிட தமிழர் தரப்புக்கும் சிறிலங்காத் தரப்புக்குமிடையில் காலத்துக்குக் காலம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் என்பவற்றைப் பார்த்தால் அனைத்துமே சிங்களப் பேரினவாதத் தரப்பால் முறிக்கப்பட்டு தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியும். சிறிலங்கா அரசுடன் நேரடியாக பேசிப்பயனில்லை என்ற வரலாற்று உண்மையை உணர்ந்தே பன்னாட்டுச் சமூகம் 2002 ஆம் ஆண்டு எமக்கும் சிறிலங்காத் தரப்புக்குமிடையில் நிடுநிலையாளராகப் பணியாற்ற முன்வந்தது. அவ்வாறு பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில் எழுதப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைகூட சிறிலங்காத் தரப்பாலேயே ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டது.</p>
<p>உலகின் ஆலோசனைகளுடன்கூடிய உள்ளகப் பொறிமுறைகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் மிக இலாவகமாக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தூக்கியெறிந்தமைக்கு சுனாமியின் பின்னரான பொதுக்கட்டமைப்பு வசதிக்கான பொறிமுறை (P-வுழுஆளு Pழளவ வுளரயெஅi ழுpநசயவழையெட ஆயயெபநஅநவெ ளுவசரஉவரசந) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p>
<p>இப்போது மீண்டும் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைமூலமான தீர்வைநோக்கித் தமிழர்களைத் தள்ளுவதைப் பன்னாட்டுச் சமூகம் செய்யத் தொடங்கியுள்ளது. தமிழ்மக்கள் பட்ட துன்பங்களையும், அவர்கள் சிறிலங்கா அரசால் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் நன்கு தெரிந்துகொண்டும், அதைவிட தாமே சிறிலங்கா அரசால் ஏமாற்றப்பட்ட அனுபவங்களைக் கொண்டிருந்தும்கூட தொடர்ந்தும் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைமூலமான தீர்வைத் தமிழ்மக்கள் மேல் திணிக்க முயல்வது எமது மக்களுக்கு விசனத்தையே ஏற்படுத்துகின்றது.</p>
<p>போர் ஓய்ந்ததாக அறிவித்து மூன்று ஆண்டுகளாகும் இந்நிலையில் தமிழர் நிலங்களில் படையினரின் செயற்பாடுகள் குறைக்கப்படவில்லை. நிலப்பறிப்புக்களும் சிங்களக் குடியேற்றங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. மக்களின் அன்றாட அசைவியக்கம் இன்றும் படைத்தரப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றது. பலவிடங்களில் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களை சிறிலங்காப் படைத்தரப்பே நடத்தி வருகின்றது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தம்மை நம்பிய தமிழ்மக்களைக் கைவிட்டது போலவே இன்றும் எமது மக்களை பன்னாட்டுச் சமூகம் கைவிட்டுள்ளது என்றே உணர்கின்றனர்.</p>
<p>இந்நிலையில் விரைவானதும் நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வொன்றை தமிழ்மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவே பன்னாட்டுச் சமூகம் உழைக்க வேண்டும். மாறாக முழுமையற்ற பொறிமுறைகளை முன்மொழிவதும் சிறிலங்கா அரசிடமே தமிழ்மக்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கான தீர்வை வழங்கும் பொறுப்பையும் ஒப்படைப்பதும் திட்டமிட்ட இனவழிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசதரப்புக்கு காலஅவகாசத்தையும் பாதுகாப்பையும் கொடுப்பதாகவே அமையும்.</p>
<p>இதேவேளைஇ நடந்துமுடிந்த மனத உரிமை கூட்டத்தொடரில் தாயகத்தில் எமது மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் கலந்துகொள்ளாது தவிர்த்தமையை நாம் வேதனையோடு பார்க்கின்றோம். தமது அரசியல் நலன்களுக்காக மட்டுமே செயற்படும் அரசுகளை விடவும், எமது அரசியற் சிக்கல் தொடர்பில் நியாயமாகச் செயற்படக்கூடிய பல்வேறு தரப்பினரும் பங்குகொள்ளும் ஓரிடத்தில் எமது தாயகத்து உண்மை நிலைமைகளை தாயகத்திலிருந்தே வந்து சொல்வதென்பது மிக முக்கியமான தாக்கத்தை வழங்கியிருக்கும். சிறிலங்கா அரசின் பொய்ப்பரப்புரைகளை மிக இலகுவாக முறியடிக்கக்கூடிய வாய்ப்பாகவும்இ அதேவேளை எதிர்காலத்தில் எமக்குச் சாதகமாக பல நிகழ்வுகள் நடக்க ஏதுவான நிலைமையை ஏற்படுத்தியிருக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.</p>
<p>அன்பான தமிழ்பேசும் மக்களே!</p>
<p>மிக நீண்ட போராட்டத்தில் நாம் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்திருக்கிறோம். அன்னியப் படைகளின் கொடுமைகளில் நாம் எமது நிலங்களையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இழந்திருக்கிறோம். உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பல்லாயிரக்கணக்கான எமது மக்கள், உணவின்றி, உறைவிடமின்றி, மருத்துவ உதவிகளின்றி அவலப்பட்டு மரித்தார்கள். இவ்வளவு அவலங்கள், தியாகங்களின் பின்னால் நாம் சோர்ந்து போகக்கூடாது. எமக்கான நீதியையும் விடுதலையையும் பெறும்வரை நாம் ஓய்ந்துபோகக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய நேரமிது.</p>
<p>பூகோள அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணமிது. தற்போதைய நிலையில் எமது போராட்டம் பன்னாட்டுச் சமூகத்தின் அதிகரித்த கவனத்தைப் பெற்றுள்ளது. சில பன்னாட்டு ஊடகங்களினதும் தன்னார்வத் தொண்டர்களினதும் செயற்பாடுகள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைவிட எமது மக்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்ந்தும் எமக்குச் சாதகமான மாற்றத்தை உலகில் ஏற்படுத்தி வருகின்றது.</p>
<p>எமது மக்கள் அமைப்புக்களாகவும் தனிப்பட்டவர்களாகவும் பன்னாட்டுச் சமூகத்தினர் மத்தியில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இச்செயற்பாடுகள் பன்னாட்டுச் சமூகத்தில் கணிசமானளவில் எமக்குச் சாதகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்ற போதுங்கூட சில குழப்பங்களையும் பன்னாட்டுச் சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளது. அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்துக்கு விடுக்கும் வேண்டுகோள் முரண்பட்டவைகளாக அமைவதும்இ ஒன்றையொன்று விமர்சிப்பதுமாக இருப்பதும் எமக்குப் பாதகமான விளைவுகளையே தந்துள்ளது. இந்த முரண்பட்ட தீர்வு வேண்டுகைகள் தொடர்பில் பல பன்னாட்டுச் சக்திகள் தமது கரிசனையை வெளியிட்டுமுள்ளன.</p>
<p>அன்பான மக்களே!</p>
<p>எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள்மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும்.</p>
<p>பல்லாண்டுகளாக சிங்கள – பெளத்த பேரினவாதத்தால் நசுக்கப்பட்டு இனவழிப்பை எதிர்கொண்டிருக்கும் எமது இனம், கடந்த காலங்களில் அனைத்து வழிமுறைகளிலும் முயன்றும் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து குறைந்தபட்ச உரிமைகளைக்கூட பெறமுடியாமல் ஏமாற்றப்பட்ட வரலாற்றைக்கொண்ட எமது இனம், வேறு வழியின்றி ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்து அதன்வழியே தனக்கான பாதுகாப்பையும் தனியரசுக் கட்டமைப்பையும் குறிப்பிட்ட காலம் பேணிய எமது இனம், சிறிலங்கா அரசில் எப்போதோ நம்பிக்கை விட்டுப்போய் பன்னாட்டுச் சமூகத்தை நடுநிலையாக வைத்து அரசியல்தீர்வை எட்ட நினைத்து அதிலும் ஏமாற்றப்பட்ட எமது இனம், மானுடவரலாற்றில் மிகக்கொடுமையான இனவழிப்பை எதிர்கொண்டுள்ள எமது இனம் தனக்கான நிரந்தரமான அரசியல்தீர்வாக முன்வைக்க வேண்டியது சிறிலங்கா என்ற அரசகட்டமைப்புக்குள் அல்லாமல் சுயாதீனமாகத் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடன்கூடிய அரசியல்தீர்வையேதான்.</p>
<p>இதற்காகத்தான் பல்லாயிரக்கணக்கான எமது மாவீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். இந்த இலட்சியத்துக்காகத்தான் இலட்சக்கணக்கான எமது மக்கள் எமது போராட்டத்தில் தோளோடு தோள் நின்றார்கள்.</p>
<p>எனவே தனிப்பட்டவர்களும் அமைப்புக்களும் எமது மக்களுக்கான அரசியல்தீர்வாக பன்னாட்டுச்சமூகத்துக்கு முன்மொழிவது எமது மக்களுக்கான தன்னாட்சியுரிமையுடன்கூடிய நிர்வாகக் கட்டமைப்பாகவே இருக்க வேண்டும். அதைநோக்கியே எமது வேண்டுகைகளும் வேலைத்திட்டங்களும் அமைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்த குரலாக எமது அரசியல் வேட்கையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எமது அவாவாகும்.</p>
<p>அதேவேளை எமது போராட்டத்தின் ஆணிவேராகவிருக்கும் தாயகத் தமிழர்களின் தற்போதைய இன்னலைத் துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அனைவரையும் நினைவிற்கொள்வதோடு எமது புலம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் இப்பணியை முன்னெடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.</p>
<p>இறுதி யுத்தமென்று கூறிக்கொண்டு எமது மக்கள்மேல் பகைவர் தொடுத்த கொடிய போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகொள்ளும் இவ்வேளையில், அவர்களின் குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.</p>
<p>பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டத்தைத் தொடர்ந்தும் வலுவாக முன்னெடுத்து எமது இறுதி இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்து போராடுவோமென இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.</p>
<p>“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”</p>
<p>தலைமைச் செயலகம்,<br />
தமிழீழ விடுதலைப்  புலிகள்,<br />
தமிழீழம்.</p>
<p>&nbsp;</p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!</title>
		<link>http://varudal.com/2012/tgtegtfjointly-issued-message2012may1/</link>
		<comments>http://varudal.com/2012/tgtegtfjointly-issued-message2012may1/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 22:53:09 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2964</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/GTF_TGTE2012may18.jpg"><img class="alignleft size-full wp-image-2965" title="GTF_TGTE2012may18" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/GTF_TGTE2012may18.jpg" alt="" width="200" height="150" /></a>முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.</p>
<p>நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள்<br />
ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அறிக்கையின் முழுவிபரம் :</p>
<p>முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நடைபெற்று முடிந்து இன்றுடன் ஆண்டுகள் மூன்றாகின்றன. இத்தினத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக்காலத்திலும் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களை நாம் ஆழ்ந்த கவலையுடனும் வணக்கத்துடனும் பொறுப்புடனும் நினைவு கூருகின்றோம்.</p>
<p>அனைத்துலகச் சட்டங்கள் நியமங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்தவாறு பயங்கவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அநாகரீக முறையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை சிறிலங்கா அரசு கொடிய முறையில் கொன்றொழித்தது.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது ஒரு வரலாற்றுப்பதிவாகியிருக்கிறது.</p>
<p>நமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்;கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இப் பெரும் கொடுமை உலகில் எந்த மக்களுக்கும் எதிர்காலத்தில் நிகழாது காக்கப்படவும் வேண்டும்.</p>
<p>இதனால் நீதி கோரும் நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல. உலகின்<br />
எந்தவொரு அரசும் மக்கள் மீது இவ்வகை மிருகத் தனமான வன்முறையினைப் பயன்படுத்துவதற்கு எல்லைகள் விதிக்கப் பட்டாக வேண்டும் என்பதற்கான போராட்டமாகவும் இது அமைகிறது.</p>
<p>சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலை தொடர்பான ஏராளமான ஆதாரங்கள் எமது கைகளிலும் அனைத்துலக சமூகத்தின் கைகளிலும் இருக்கின்றன. சிறிலங்கா அரசு தன் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஒரு பொழுதும் உள்நாட்டில் உரியமுறையில் செய்யப்போவதில்லை,<br />
செய்யவும் முடியாது என்பதும் அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள முடியாத விடயம் அல்ல. அதே சமயத்தில், வெளியுலகம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது இனத்தையும் தேசத்தையும்  அழிக்கும் நடவடிக்கைளை அரசு வேகப்படுத்தி வருகிறது. இதனால் காலம் கடத்தாது, அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைவில் முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>இத்தனை இன்னல்களின் மத்தியிலும் சிக்கியிருக்கும் நமது மக்கள்; அங்கே கௌரவத்துடன் வாழத் துடிக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.</p>
<p>ஈழத் தாயகமும் &#8211; புலமும் &#8211; தமிழகமும்  புரிந்துணர்வுடன் கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் உலகத் தமிழ் மக்களினதும் உலகில் நீதிக்காய்க் குரல் தரக்கூடிய மக்கள் சமூகத்தின் ஆதரவுடனும் அவற்றினை நாம் முன்னெடுக்கும்; போது, அனைத்துலக சமூகம் நமது நீதிக்கான குரலை செவிமடுக்கும் சூழலை உருவாக்க முடியும்.</p>
<p>தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகார மமதையும் ஆணவப்போக்கும் அனைத்துலக சமூகத்தின் வெறுப்பினைச் சம்பாதித்து வருகின்றன. இது நமக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் நிலைமைகளைத் தோற்றுவித்தும் வருகிறது. அதே சமயத்தில் முள்ளிவாய்க்காலின் பின் சர்வதேச மன நிலையிலும் பார்வையிலும் அணுகு முறையிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவைகளை எமது கவனத்திற்கொண்டு, நாம் விவேகத்துடனும் அரசியல் ஞானத்துடனும் எமக்கு ஆதாயமாக்கிச் செயற்பட வேண்டும். நமக்கிடையிலேயான புரிந்துணர்வையும் கூட்டுச் செயற்பாடுகளையும் வலுப்படுத்தவும் வேண்டும்.</p>
<p>இந்நோக்குடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் இம் மாதம் 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் என்பதனை நமது மக்களுக்கு அறியத் தருகிறோம்.</p>
<p>முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் நாம் முன்னெடுக்கும் நமது மூன்றாம் கட்ட விடுதலைப்பயணத்தில் இம் முயற்சி ஒரு முக்கியமான ஒரு மைல்கல்லாகும். உலகத் தமிழர் பேரவை மேற்கொண்டு பல்வேறு புலம்பெயர் தமிழமைப்புக்களுடனும் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளுடனும் இவ்வகை பொதுவான புரிந்துணர்வு நோக்கி செயற்படவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழ் மக்களிடையே, அதுவும் குறிப்பாகத் தமிழக உறவுகளிடையேயும் மற்றும் சர்வதேச மக்கள் சமூகத்திடையேயும் தமது வலுவைத் திரட்டி வருகிறது.</p>
<p>முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் இன்றைய தினத்திலே நமது மக்களின் விடுதலை நோக்கிய பயணம் ஓய்வின்றித் தொடரும் என்ற தெளிவான செய்தியினை நாம் கூட்டிணைந்து வெளிப்படுத்த விரும்புகிறோம்.</p>
<p>இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள்<br />
ஆகியோரது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.</p>
<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/tgte+gtf-Jointly-issued-message-may18.jpg"><img class="alignleft size-full wp-image-2968" title="tgte+gtf-Jointly issued message-may18" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/tgte+gtf-Jointly-issued-message-may18.jpg" alt="" width="500" height="781" /></a></p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/tgtegtfjointly-issued-message2012may1/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/tgtegtfjointly-issued-message2012may1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 22:44:59 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2953</guid>
		<description><![CDATA[தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் சிறீலங்கா அரச படையினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பினையும், மனித உரிமை மீறல்களையும் வேற்றினத்தவர் மத்தியில் கொண்டுசேர்க்கும் நோக்கோடு லண்டனில் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நடைபெறுகின்றது. நேற்று முதல் ஆரம்பமாகி இன்றும் தொடரும் இந்த பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் ஈஸ்ட்ஹாம், இல்பேட், வொல்த்தம்ஸ்ரோ, றெட்பிறிச், எட்மெண்டன், கொலிண்டேல், வெம்பிலி, அல்பேட்டன் சவுதோல், சவுத்ஹறோ, றெயினஸ்லேன், ஹறோ ஆகியபகுதிக்அளில் மேற்கொள்ளப்பட்ட இவ் விழிப்புணர்வுப் போராட்டம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-200-leaflets.jpg"><img class="alignleft size-full wp-image-2954" title="may-18-bus-2012-uk-200-leaflets" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-200-leaflets.jpg" alt="" width="200" height="150" /></a>தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் சிறீலங்கா அரச படையினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பினையும், மனித உரிமை மீறல்களையும் வேற்றினத்தவர் மத்தியில் கொண்டுசேர்க்கும் நோக்கோடு லண்டனில் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நடைபெறுகின்றது.</p>
<p>நேற்று முதல் ஆரம்பமாகி இன்றும் தொடரும் இந்த பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.</p>
<p>நேற்றைய தினம் ஈஸ்ட்ஹாம், இல்பேட், வொல்த்தம்ஸ்ரோ, றெட்பிறிச், எட்மெண்டன், கொலிண்டேல், வெம்பிலி, அல்பேட்டன் சவுதோல், சவுத்ஹறோ, றெயினஸ்லேன், ஹறோ ஆகியபகுதிக்அளில் மேற்கொள்ளப்பட்ட இவ் விழிப்புணர்வுப் போராட்டம்</p>
<p>இன்று மோர்டன், விம்பிள்டன், ரூட்டிங், மிச்சம், குறைடன்,  கிளப்ஹாம், ஸ்ரொக்வெல், நியூமோல்டன், பட்னி, வொன்ஸ்வேத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு துண்டுப்பிரச்ர வினியோகத்திற்கு வேற்றினத்தவர்கள் மிகுந்த ஆதரவை வழங்கியதோடு, பேரூந்தின் உட்புறத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இன அழிப்புத் தொடர்பான கண்காட்சியையும் பார்த்து வியந்து தமது இரங்கலையும் தெரிவித்துச் சென்றனர்.</p>
<p>இப் பேரூந்து கண்காட்சி முள்ளிவாய்க்கால் &#8220;பேரழிவின் நினைவு நாளான மே18&#8243; நாளை 18.05.2012 வெள்ளிக்கிழமை அன்றும் மத்திய லண்டன் பகுதியில் காலை 9:00 மணியிலிருந்து மாலை 3:00 மணி வரை இடம்பெறவுள்ளது.  பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளையதினம் laNdanil நடைபெறவுள்ள &#8220;முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் நாள் நினைவு நிகழ்வு&#8221; மைதானத்திலும் இப் பேரூந்து கண்காட்சி இடம்பெறவுள்ளது.</p>
<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-03.jpg"><img class="alignleft size-full wp-image-2955" title="may-18-bus-2012-uk-03" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-03.jpg" alt="" width="500" height="333" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-08.jpg"><img class="alignleft size-full wp-image-2956" title="may-18-bus-2012-uk-08" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-08.jpg" alt="" width="500" height="333" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-09.jpg"><img class="alignleft size-full wp-image-2957" title="may-18-bus-2012-uk-09" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-09.jpg" alt="" width="500" height="333" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-06.jpg"><img class="alignleft size-full wp-image-2958" title="may-18-bus-2012-uk-06" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-06.jpg" alt="" width="500" height="333" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-091.jpg"><img class="alignleft size-full wp-image-2959" title="may-18-bus-2012-uk-09" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-091.jpg" alt="" width="500" height="333" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-15.jpg"><img class="alignleft size-full wp-image-2960" title="may-18-bus-2012-uk-15" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-15.jpg" alt="" width="500" height="333" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-13.jpg"><img class="alignleft size-full wp-image-2961" title="may-18-bus-2012-uk-13" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-13.jpg" alt="" width="500" height="333" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-01.jpg"><img class="alignleft size-full wp-image-2962" title="may-18-bus-2012-uk-01" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/may-18-bus-2012-uk-01.jpg" alt="" width="500" height="333" /></a></p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:35:01 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2950</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட போர் 2009 மே 18ம் நாள் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்களை சிறிலங்கா இராணுவம் கொன்று குவித்தது. முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினரால் கொன்றழிக்கப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. இந்தநிலையில், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/sri-lanka-high-commission-in-chennai.jpg"><img class="alignleft size-full wp-image-2951" title="sri lanka high commission in chennai" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/sri-lanka-high-commission-in-chennai.jpg" alt="" width="200" height="150" /></a>முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட போர் 2009 மே 18ம் நாள் முடிவுக்கு வந்தது.</p>
<p>இந்த இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்களை சிறிலங்கா இராணுவம் கொன்று குவித்தது.</p>
<p>முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினரால் கொன்றழிக்கப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.</p>
<p>இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்துக்கான பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை அதிகரித்துள்ளது.</p>
<p>அத்துடன் எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி, மகாபோதி நிலையம், உள்ளிட்ட சிறிலங்கா நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இங்கு, வழக்கத்தை விட அதிகளவு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p>
<p>அத்துடன், சிறிலங்கா சார்ந்த பணியகங்களுக்கு வரும் பொதுமக்களும், காவல்துறையினரின் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.</p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் &#8211; ஆசிய மனித உரிமை ஆணையகம்.</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:29:15 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2947</guid>
		<description><![CDATA[சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பாக நீண்ட காலமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய யோசப் இராயப்புவின் பாதுகாப்புத் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணையகமானது தனது கவலையைத் தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள போதகர் என்ற வகையிலும், இதயசுத்தியுடன் செயற்படும் மதத் தலைவர் என்ற வகையிலும், வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு தனது மக்களாகிய தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தனது ஆழ்ந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/Rayappu_joseph200vn.jpg"><img class="alignleft size-full wp-image-2841" title="Rayappu_joseph200vn" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/Rayappu_joseph200vn.jpg" alt="" width="200" height="150" /></a>சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பாக நீண்ட காலமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய யோசப் இராயப்புவின் பாதுகாப்புத் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணையகமானது தனது கவலையைத் தெரிவித்துள்ளது.</p>
<p>தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள போதகர் என்ற வகையிலும், இதயசுத்தியுடன் செயற்படும் மதத் தலைவர் என்ற வகையிலும், வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு தனது மக்களாகிய தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வருகின்றார்.</p>
<p>&#8220;சிறிலங்காவில் 30 ஆண்டுகளாகத் தொடரப்பட்டு மே 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட மிகக் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் போது 146,000 பேர்வரை காணாமற் போயுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தது தொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய யோசப் இராயப்புவிடம் சிறிலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்&#8221; என மே 13, 2012 அன்று வெளியிடப்பட்ட சண்டேலீடர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மன்னார் மறை மாவட்ட ஆயரிடம் சென்று விசாரணை மேற்கொண்டதை சிறிலங்கா காவற்துறைப் பேச்சாளரான அஜித் றொகன்ன உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>சிறிலங்காவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றமிழைத்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீது குற்றப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள முடியும். எனினும், இவ்வாறான எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத தனிப்பட்டவர்கள் மீது இவ்வாறான குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்படுவதானது சிறிலங்காவைப் பொறுத்தளவில் தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு குற்றம் செய்யாத ஒருவர் மீது விசாரணைகளை மேற்கொள்வதென்பது மக்களின் அடிப்படை குடியுரிமையை மீறுகின்ற செயலாகக் காணப்படுவதுடன், மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் குழப்பம் என்பவற்றைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்துள்ளது.</p>
<p>மன்னார் மறை மாவட்ட ஆயர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சதித் திட்டத்தின் மூலம் ஆயரது உயிருக்க ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சிறிலங்காவைப் பொறுத்தளவில் காணாமற்போதல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் என்பன வழமையாக நடைபெறுகின்ற சம்பவங்களாக மாறிவிட்டன. சிறிலங்காவில் சில மதகுருமார்கள் மற்றும் புத்த பிக்குகள் கூட காணாமற் போயுள்ளனர், கடத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>இவ்வாண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குரல்கொடுத்த பலர் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.</p>
<p>தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், நாட்டில் மீளிணக்கப்பாட்டைக் கொண்டு வரவேண்டியதன் தேவைப்பாட்டையும் குறிப்பிட்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு அவர்கள், சிறிலங்கா அதிபருக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதங்களை அனுப்பியிருந்தார்.</p>
<p>சிறிலங்காவில், தமது இன மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமை தொடர்பில் குரல் கொடுப்பவர்கள் தற்போது மிக மோசமான ஆபத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.</p>
<p>இவ்வாறான சூழ்நிலைகளின் மத்தியில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் வணக்கத்துக்குரிய இராயப்பு அடிகளாரின் பாதுகாப்புத் தொடர்பில் பலர் கவலை கொள்கின்றனர். இவருக்கான பாதுகாப்பை வழங்கி, அடிகளாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் எடுக்க வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தி நிற்கின்றது.</p>
<p>சிறிலங்காவில் உள்ள அனைத்து இராஜதந்திர அமைப்புக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அனைத்துலக சமூகமும் இவ்விடயம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீது தமது அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என நாம் கோரிநிற்கின்றோம்.</p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:27:12 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2945</guid>
		<description><![CDATA[ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நாளை சந்திக்கவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இதுகுறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் சிறிலங்காவின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/03/america-flag200vn2.jpg"><img class="alignleft size-full wp-image-1750" title="america-flag200vn2" src="http://varudal.com/wp-content/uploads/2012/03/america-flag200vn2.jpg" alt="" width="200" height="150" /></a>ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.</p>
<p>சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நாளை சந்திக்கவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இதுகுறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>சிறிலங்கா குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் குறித்து ஆர்வம் கொண்டுள்ள சில செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளதாகவும், அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதற்கிடையே வெளிவிவகாரக் குழுவில் அங்கம் வகிக்கும் அமெரிக்க செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்தவாரம் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் குழுவினர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை சிறிலங்கா நடைமுறைப்படுத்த, பீரிசிடம் அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.</p>
<p>அத்துடன் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுதியாக முடிவெடுக்கும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்துமாறு கோரும் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழு அனுப்பி வைத்துள்ளது.</p>
<p>அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக இறுக்கமாகப் பேச வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் ஹிலாரி கிளின்ரனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:22:34 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2942</guid>
		<description><![CDATA[சிறீலங்காவில் தடுப்புக்காவலிலுள்ள முன்னாள் முன்னாள் போராளிகள் தமக்கான நீதி வழங்கப்படும் வரை  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இருநூறு பேரும் களுத்துறைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முப்பது பேரும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மூன்றாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் தமது விடுதலை பற்றி எதுவித அறிவித்தலுமின்றி வைக்கப்பட்டுள்ளார்கள். விடுதலை செய்யவோ அல்லது வழக்குத் தாக்கல் செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்காது காலவரையறையின்றி தடுப்புக் காவலில் இருக்கும் இவர்கள் தமது நிலமையை வெளிக்கொணரவும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/01/magacin_prision200vn.jpg"><img class="alignleft size-full wp-image-276" title="magacin_prision200vn" src="http://varudal.com/wp-content/uploads/2012/01/magacin_prision200vn.jpg" alt="" width="200" height="150" /></a>சிறீலங்காவில் தடுப்புக்காவலிலுள்ள முன்னாள் முன்னாள் போராளிகள் தமக்கான நீதி வழங்கப்படும் வரை  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p>
<p>வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இருநூறு பேரும் களுத்துறைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முப்பது பேரும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p>
<p>மூன்றாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் தமது விடுதலை பற்றி எதுவித அறிவித்தலுமின்றி வைக்கப்பட்டுள்ளார்கள். விடுதலை செய்யவோ அல்லது வழக்குத் தாக்கல் செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்காது காலவரையறையின்றி தடுப்புக் காவலில் இருக்கும் இவர்கள் தமது நிலமையை வெளிக்கொணரவும் தமது விடுதலையை துரிதப்படுத்தவும், வேண்டி இப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.</p>
<p>தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும், முறையாக அறிவிப்புச் செய்யப்பட்டு இப்போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.</p>
<p>அனுராதபுரம், மகசின் சிறை, யாழ்ப்பாணச் சிறை, என பல இடங்களில் மேலும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8221; முள்ளிவாய்கால் முற்றம் &#8221; எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மனில் வெளியிடப்பட்டது:</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:14:16 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2938</guid>
		<description><![CDATA[நேற்று 16.05.2012 அன்று யேர்மனி பெர்லின் நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை நினைவுகூரும் முகமாக &#8221; முள்ளிவாய்கால் முற்றம் &#8221; எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மன் தமிழ்ப் பெண்கள் கூட்டமைப்பால் வெளியிடப்பட்டது . நிகழ்வின் ஆரம்பமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இறுதி நேரத்திலும் உறுதி தளராமல் களமாடி காவியமாகிய மாவீரர்களுக்கும் மக்களுக்கும் பொதுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது . அதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக சிறுவர்களின் ஓவியம் , கவிதை , கட்டுரை என [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/mullivaikal-book-germany2012.jpg"><img class="alignleft size-full wp-image-2939" title="mullivaikal-book-germany2012" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/mullivaikal-book-germany2012.jpg" alt="" width="200" height="150" /></a>நேற்று 16.05.2012 அன்று யேர்மனி பெர்லின் நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை நினைவுகூரும் முகமாக &#8221; முள்ளிவாய்கால் முற்றம் &#8221; எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மன் தமிழ்ப் பெண்கள் கூட்டமைப்பால் வெளியிடப்பட்டது .</p>
<p>நிகழ்வின் ஆரம்பமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இறுதி நேரத்திலும் உறுதி தளராமல் களமாடி காவியமாகிய மாவீரர்களுக்கும் மக்களுக்கும் பொதுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது . அதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக சிறுவர்களின் ஓவியம் , கவிதை , கட்டுரை என முழுமையான ஆக்கங்களை கொண்டு &#8221; முள்ளிவாய்கால் முற்றம் &#8221; எனும் நூல் வெளியிடப்பட்டது . இவ் நூலின் முன்அட்டைக்கு புரட்சி ஓவியர் புகழேந்தி அவர்களின் போர்முகங்கள் எனும் ஓவியத்தொகுப்பில் இருந்து வரையப்பட்ட ஓவியம் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் பட்ட துன்பங்களை நேரில் காட்டியது .</p>
<p>வெளியீட்டை தொடர்ந்து சிறுவர்கள் தமது ஆக்கங்களை வழங்கினர் .</p>
<p>அத்தோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை நினைவுகூரும் முகமாக &#8220;இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்!&#8217; எனும் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் முகமாக சிறுவர்களின் தன்னம்பிக்கைக்கும் சமூதாய சிந்தனைக்கும் வலுவூட்டும் முகமாக &#8216;நாளையத் தலைவர்கள்&#8217; எனும் பயிற்ச்சிப் பட்டறை ஒன்றும் ஆசிரியர் Andreas Glock அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது .இவ் பயிற்ச்சிப் பட்டறை மாதம் ஒரு தடவை இலவசமாக சிறுவர்களுக்காக வழங்கப்படும் .</p>
<p>நிகழ்வின் இறுதியில் தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவாக கடந்த மாதம் நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டது .</p>
<p>யேர்மன் பெர்லின் மாநிலத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை நினைவுகூரும் முகமாக சில நிகழ்வுகளில் தகவல்கள் பின்வருமாறு :</p>
<p>முள்ளிவாய்க்கால் நினைவுக்குறியீடு &#8216;நடுகல்&#8217; நிகழ்வு<br />
17.05.2012 வியாழக்கிழமை:<br />
15:00 மணிக்கு<br />
இடம்: Mohriner Allee 145, 12347 Berlin<br />
18 .05 .2012 மே 18 போர்க்குற்ற நாள்<br />
15 மணிக்கு பேரணி D�sseldorf Hauptbahnhof<br />
16:30 மணிக்கு நினைவு நிகழ்வு D�sseldorf Landtag (மாகாண சபை)<br />
முன்றலில்<br />
வாகன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது<br />
21.05.201 மே 18 போர்க்குற்ற நாள் Ged�chtniskirche Berlin<br />
17 மணிக்கு: &#8217;146.679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது?<br />
மன்னார் பிச்சொப் கலாநிதி ராஜப்பு ஜோசப்&#8217; &#8211; கண்காட்சி<br />
18 மணிக்கு: வணக்கநிகழ்வு மற்றும் மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு<br />
தகவல் : யேர்மன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பு</p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்:</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:06:52 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2934</guid>
		<description><![CDATA[ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் &#8211; இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று 16.05.2012 மாலை 6 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை குறுகிய காலத்தில் தோழர் திருமலை சிறப்பாக செய்திருந்தார். இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்தினை இட்டு இந்நிகழ்வினை தொடங்கிவைத்தார். இரண்டாம் கையெழுத்தினை அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் மூன்றாம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/kaiyoppam-may18-chennai.jpg"><img class="alignleft size-full wp-image-2935" title="kaiyoppam-may18-chennai" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/kaiyoppam-may18-chennai.jpg" alt="" width="200" height="150" /></a>ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் &#8211; இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று 16.05.2012 மாலை 6 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நடைபெற்றது.</p>
<p>இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை குறுகிய காலத்தில் தோழர் திருமலை சிறப்பாக செய்திருந்தார்.</p>
<p>இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்தினை இட்டு இந்நிகழ்வினை தொடங்கிவைத்தார். இரண்டாம் கையெழுத்தினை அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் மூன்றாம் கையெழுத்தினை மதிமுக பொதுச்செயலாளர் தோழர் வைகோ அவர்களும் இட்டனர்.</p>
<p>இதனைத்தொடர்ந்து மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜவஹருல்லா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தோழர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை இயக்க தோழர் பண்ருட்டி வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் தோழர் தனியரசு, பெரியார் திராவிடர் கழகத்தோழர் தபசி.குமரன், மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழரைக்காப்போம் அமைப்பின் தோழர் செந்தில், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மருத்துவர் எழிலன், பாவலர் அறிவுமதி, பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.</p>
<p>மெரீனா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அமைப்பின் தோழர்கள் ஈழ விடுதலையின் அவசியத்தை வலியுறுத்து விளக்கி துண்டறிக்கையினை கொடுத்து கையெழுத்திட வைத்தனர்.</p>
<p>பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பலரும் தமிழீழத்திற்கான தம் ஆதரவினை தெரிவித்து கையெழுத்திட்டனர். தமிழக காவல்துறையிலிருக்கும் உணர்வாளர்களும் தமிழீழத்திற்கான தங்கள் ஆதரவினை தெரிவித்து கையெழுத்தினை இட்டது தோழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியினை கனடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா நிகழ்வில் நேரலையாக ஒலிபரப்பினை செய்திருந்தனர்.</p>
<p>இந்நிகழ்வினை இணைக்கப்பட்டுள்ள காணொளிகளும், நிழற்படங்களிலும் நீங்கள் காணலாம்.</p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை! வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!</title>
		<link>http://varudal.com/2012/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/</link>
		<comments>http://varudal.com/2012/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 08:05:40 +0000</pubDate>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://varudal.com/?p=2920</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த சுவரொட்டி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster200vn.jpg"><img class="alignleft size-full wp-image-2921" title="jaffna_uni-poster200vn" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster200vn.jpg" alt="" width="200" height="150" /></a>முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.</p>
<p>பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த சுவரொட்டி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p>
<p>வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.</p>
<p><strong>தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள்!</strong></p>
<p><strong>முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!</strong></p>
<p><strong>உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை! </strong></p>
<p><strong>உரிமைக்காய் குரல் கொடுப்போம்! நீதிக்காய் போராடுவோம்!</strong></p>
<p><strong>வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!</strong></p>
<p>என தமது விடுதலை வேணவாவை மற்றும் உணர்வை உயிரூட்டும் முகமாக சுவரொட்டிகளை வெளிப்படுத்தினர்.</p>
<p>தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் சிங்கள இனவெறி அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும் பரப்புரையின் காரணமாக புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,</p>
<p>விடுதலை வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள்.</p>
<p>அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.</p>
<p>கருத்துச் சுதந்திரம் பேணப்படாத நாட்டில் சிங்கள அரசின் அடாவடித்தனமான எவ்வித காட்டுமிராண்டித்தனமான விரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழின தன்மானத்தோடு தாயகத் தமிழர்களின் கருத்தை ஒருமித்து நிலைநாட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் புலம்பெயர் ஈழத்தமிழராகிய நாம் தலைவணங்குகிறோம்.</p>
<p><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn02.jpg"><img class="alignleft size-full wp-image-2922" title="jaffna_uni-poster15052012vn02" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn02.jpg" alt="" width="500" height="376" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn04.jpg"><img class="alignleft size-full wp-image-2923" title="jaffna_uni-poster15052012vn04" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn04.jpg" alt="" width="500" height="376" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn01.jpg"><img class="alignleft size-full wp-image-2924" title="jaffna_uni-poster15052012vn01" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn01.jpg" alt="" width="500" height="376" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn03.jpg"><img class="alignleft size-full wp-image-2925" title="jaffna_uni-poster15052012vn03" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn03.jpg" alt="" width="500" height="376" /></a><a href="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn05.jpg"><img class="alignleft size-full wp-image-2926" title="jaffna_uni-poster15052012vn05" src="http://varudal.com/wp-content/uploads/2012/05/jaffna_uni-poster15052012vn05.jpg" alt="" width="500" height="376" /></a></p>
<div class="al2fb_like_button"><div id="fb-root"></div><script type="text/javascript">
(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=274883849244154";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, "script", "facebook-jssdk"));
</script>
<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://varudal.com/2012/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

